கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான வாக்காளர் சேர்க்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி

2 months ago 5

மதுரை, டிச. 3: மதுரை மாநகராட்சி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப்பணிகள் தொடர்பாக மதுரை மருத்துவக் கல்லூரி மற்றும் லேடி டோக் கல்லூரியில் மாணவ, மாணவிகளிடம் இளம் வாக்காளர்கள் பெயர் சேர்த்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி கமிஷனர் (மண்டலம் 2) கோபு முன்னிலை வகித்தார். இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வடக்கு சட்டமன்ற தொகுதி பகுதியில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதன்படி, கல்லூரி மாணவ, மாணவிகளிடம் படிவம் 6 வழங்கி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேலும் குறைவான வாக்குப்பதிவு நடைபெற்ற பகுதிகளான கோ.புதூர், ஜவஹர்புரம், பீபீ குளம் மற்றும் அண்ணா நகர் பகுதிகளில் கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்பணர்வு ஏற்படுத்தினர். இதில் துணை தாசில்தார் (தேர்தல்) வீரக்குமார், முதுநிலை வருவாய் ஆய்வாளர் ராஜகுரு, சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன், கலைகுழுவினர், கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான வாக்காளர் சேர்க்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article