கறம்பக்குடியில் ஆடு திருட்டு

6 hours ago 2

கறம்பக்குடி,மே17: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தட்டார தெருவை சேர்ந்தவர் ஜபருல்லா இவர் சொந்தமாக ஆடுகள் வளர்த்து வருகிறார், தினம் தோறும் மேய்ச்சளுக்கு சென்ற ஆடுகளை இரவு ஆட்டுப்பட்டியில் அடைப்பது வழக்கம். அதேபோல நேற்று முன்தினம் இரவு ஆடுகளை தனது ஆட்டு பட்டியில் அடைத்து விட்டு தூங்க சென்றுள்ளார். விடியற்காலை எழுந்து பார்த்த போது 2 ஆட்டுக்குட்டிகள் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார், எங்கு தேடி பார்த்தும் கிடைக்காத தால் மண விரக்தியில் இருந்துள்ளார். இது குறித்து கறம்பக்குடி காவல் துறையினர் விசாரணை செய்ய வேண்டும் என்றும் இரவு நேரங்களில் முழுவதும் கோடை காலத்தில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும் பொது மக்கள் விரும்புவதாக கூறினார்.

The post கறம்பக்குடியில் ஆடு திருட்டு appeared first on Dinakaran.

Read Entire Article