கறம்பக்குடி அருகே கிணற்றுக்குள் விழுந்த கன்றுக்குட்டி உயிருடன் மீட்பு

2 months ago 13

 

கறம்பக்குடி, நவ. 17: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே நெய்வேலி வடபாதி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் விவசாயி இவருக்கு சொந்தமான கன்று குட்டி ஒன்று நேற்று மாலை கிணற்றுக்குள் விழுந்து விட்டதாக கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர் தீயணைப்பு நிலைய அலுவலர் சிறைசீலன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கிணற்றுக்குள் இறங்கி கத்திக் கொண்டிருந்த கன்று குட்டியை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். கன்று குட்டியை மீட்ட தீயணைப்புத் துறையினரை பொதுமக்கள் பாராட்டினர்.

The post கறம்பக்குடி அருகே கிணற்றுக்குள் விழுந்த கன்றுக்குட்டி உயிருடன் மீட்பு appeared first on Dinakaran.

Read Entire Article