ஆர்.கே.பேட்டை, பிப்.24: ஆர்.கே.பேட்டை ஒன்றியம், வங்கனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆல் தி சில்ரன் அறக்கட்டளை சார்பில் உலக பிறவி இதய குறைபாடு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு நோய் கண்டறிதல் மற்றும் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். மருத்துவ அலுவலர் ஞானசேகர் முகாமை துவக்கி வைத்தார். ஆல் தி சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரஜினி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மற்றும் கர்ப்பிணிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post கர்ப்பிணிகளுக்கு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.