கருப்பை கண்டால் ஏன் முதல்வர் இவ்வளவு அச்சப்படுகிறார்? - இபிஎஸ் கேள்வி

4 months ago 14

‘யார் அந்த சார்’ என்று கேட்டாலே அரசு பதறுவது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டப்பேரவைக்கு நேற்று வந்த எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள், தங்களது சட்டைகளில் 'யார் அந்த சார்?' என்ற வாசகம் அடங்கிய பேட்ஜ்களை அணிந்திருந்தனர். அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமைக்கு கண்டனம் தெரித்தும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்கும் விதமாக அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக அதிமுகவினர் இந்த பேட்ஜ்களை அணிந்து வந்திருந்தனர். தொடர்ந்து சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னரும், யார் அந்த சார்? என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு, பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதிகேட்டு கோஷங்களை எழுப்பியபடியே வெளியே வந்தனர்.

Read Entire Article