சென்னை: பட்டியலின மாணவி கருக்கலைப்பின்போது உயிரிழந்த விவகாரம் குறித்து செங்கல்பட்டு எஸ்பி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஆதிதிராவிடர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை வண்டலூரை அடுத்த மேலக்கோட்டையூரில் தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவியை, அதே பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த நாமக்கல்லை சேர்ந்த ராஜேஷ்குமார் ஆசைவார்த்தை கூறி கர்ப்பிணியாக்கியதாக கூறப்படுகிறது.