அரூர், பிப்.14: கம்பைநல்லூர் பஸ் நிலையம், காவல் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து அதிகளவில் நிறைந்து காணப்படுகிறது. இந்நிலையில், சாலைகளில் கழுதைகள் அதிகம் சுற்றி திரிந்து வருகிறது. சாலையில் குறுக்கும், நெடுக்குமாக திரிவதால் கார், பஸ் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஏற்கனவே குறுகலான சாலைகளால் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதியில், இது போன்று விலங்குகள் சுற்றி திரிவதால் போக்குவரத்து பாதிப்பதுடன் விபத்திற்கும் வழிவகை செய்வதாக உள்ளது. எனவே, கேட்பாரற்று சுற்றி திரியும் கழுதை, குதிரை, மாடு உள்ளிட்ட கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கம்பைநல்லூரில் சாலைகளில் சுற்றி திரியும் கழுதைகள் appeared first on Dinakaran.