கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டத்தில் நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா அறிவித்துள்ளார். பூதப்பாண்டியில் உள்ள பூதலிங்க சுவாமி சிவகாமி அம்மாள் கோயில் தைமாத திருவிழாவை ஒட்டி மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்லூரி நிறுவனங்களுக்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்.10 உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக பிப்.22-ம் தேதி சனிக்கிழமை வேலை நாள் என மாவட்ட ஆட்சியர் அழகு மீனா அறிவித்துள்ளார்.
The post கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டத்தில் நாளை மறுநாள்(பிப்.10) உள்ளூர் விடுமுறை appeared first on Dinakaran.