கடத்தூரில் மரங்களை அகற்ற ஆர்டிஓ ஆய்வு

2 months ago 9

கடத்தூர், நவ.29: கடத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் வழியில், பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் 3 புளிய மரங்களை அகற்ற, அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அரூர் கோட்டாட்சியருக்கு மனு அளித்தனர். இந்நிலையில் நேற்று, அரூர் கோட்டாட்சியர் சின்னுசாமி, கடத்தூர் அரசு மருத்துவமனை பின்புறம் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செல்லும் சாலையில் உள்ள 3 புளிய மரங்கள் குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் வள்ளி, கடத்தூர் வருவாய் ஆய்வாளர் முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

The post கடத்தூரில் மரங்களை அகற்ற ஆர்டிஓ ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article