புதுடெல்லி/ ஈரோடு: டெல்லி சட்டப்பேரவை தேர்தல் மற்றும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்குகிறது. தேர்தல் முடிவுகள் பிற்பகலில் தெரிந்துவிடும்.
டெல்லியில் அதிஷி தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சிநடைபெறுகிறது. 70 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில், 60.42 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்தபடி, வாக்கு எண்ணிக்கை இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. காலை 8 மணி முதல் முன்னிலை நிலவரம் வெளியாகும்.