கஞ்சா, போதை மாத்திரைகளுடன் முன்னாள் கவுன்சிலர், மகன் கைது

2 months ago 10

திருவொற்றியூர்: கொடுங்கையூரில் வசித்து வருபவர் நாகராஜ் (43). திருவொற்றியூர் நகராட்சியின் முன்னாள் கவுன்சிலர். இவரது மகன் யுவராஜ் (23). இவரும் ரவுடி, இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் வழக்கு ஒன்றில் ஆஜராகாமல் இருந்த நாகராஜ், அவரது மகன் யுவராஜ் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.

நேற்று தனது வீட்டில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து போலீசார் தந்தை, மகன் இருவரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களை சோதனையிட்டதில் அவர்களிடம் 2 கிலோ 300 கிராம் கஞ்சா, போதை மாத்திரைகள், 2 பட்டா கத்திகளை இருப்பதை கண்டு பிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post கஞ்சா, போதை மாத்திரைகளுடன் முன்னாள் கவுன்சிலர், மகன் கைது appeared first on Dinakaran.

Read Entire Article