இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் 24-ம் தேதி முதல் காலவறையற்ற வேலை நிறுத்தத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தச் சூழலில், “கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது வரலாற்றுப் பிழை. அதை திரும்பப் பெறுவதற்கு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டும்” என மீனவ பிரதிநிதிகளின் குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன.
கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்ததால் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக மீனவர்கள் சொல்லமுடியாத இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். இங்கிருக்கும் அரசியல் கட்சிகளோ தேர்தல் வாக்குறுதியில் சேர்க்கும் அம்சமாகவே கச்சத்தீவு விவகாரத்தைக் கணக்கில் வைத்திருக்கின்றன.