தமிழக கிராமங்களில் அதிகரித்து வரும் மாரடைப்பு நோய்.. ஒரே வாரத்தில் 174 பேர் பாதிப்பு!

3 hours ago 1

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் ஒரு வாரத்தில் 174 பேர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உலக அளவில் இதய நோய் காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளம் வயதினருக்கும் இதய நோய் பாதிப்பு அதிகரித்து திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பதும் அதிகரித்து வருகிறது. மாரடைப்பு ஏற்படும் போது முதல் ஒரு மணி நேரத்தில் சிகிச்சை பெறுவது உயிரிழப்பை தடுக்கும்.

எனவே தான் தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் இதயம் காப்போம் திட்டத்தை 2023ம் ஆண்டு முதல் அரசு செயல்படுத்தி வருகிறது. மாரடைப்புடன் வருவோருக்கு அதை தடுக்கும் வகையில் ஆஸ்பிரின் 150mg, இரண்டு மாத்திரைகள், Clopidogrel 75mg, நான்கு மாத்திரைகள், Atorvastatin 10mg 8 மாத்திரைகள் என 14 மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் கிராம புரங்களில் மட்டும் 174பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.

உணவு முறை போன்ற காரணங்களால் இதய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதாக பொதுசுகாதாரத் துறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார். இதற்காக தமிழ்நாட்டில் பிரத்யேகமாக தொடங்கப்பட்ட இதயம் காப்போம் திட்டத்தில் இதுவரை 15,019 பேர் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுபவர்களின் 90% பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post தமிழக கிராமங்களில் அதிகரித்து வரும் மாரடைப்பு நோய்.. ஒரே வாரத்தில் 174 பேர் பாதிப்பு! appeared first on Dinakaran.

Read Entire Article