ஓமலூர் பகுதிகளில் மது விற்ற 6 பேர் கைது

3 hours ago 2

ஓமலூர், பிப்.25: ஓமலூர் காவல் நிலைய எல்லையில் மது பதுக்கி விற்பனை செய்வதை தடுக்க, எஸ்ஐ சையத் முபாரக் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, இளம்பிள்ளை தெற்கு முதலியார் தெருவை சேர்ந்த முருகன் (46), ஓமலூர் பஸ் நிலையத்தில் மது விற்றபோது கைது செய்யப்பட்டார். அதேபோல செல்லப்பிள்ளைகுட்டையை சேர்ந்த கார்த்திக் (32), தாத்தையங்கார்பட்டியை சேர்ந்த பழனி (70), காமலாபுரம் மேல்வீதியை சேர்ந்த ரத்தினம்மாள் (60), ஓமலூர் அலங்கார் தியேட்டர் பகுதியை சேர்ந்த காமராஜ் (36), பாகல்பட்டியை சேர்ந்த ராஜ்குமார் (32) உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 50க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post ஓமலூர் பகுதிகளில் மது விற்ற 6 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article