ஓட்டல் தொழிலாளி தூக்குப்போட்டு சாவு

2 weeks ago 2

அருமனை, ஜன.19: அருமனை அருகே மூவாற்றுமுகம் பதினெட்டாம் திட்டவிளை பகுதியை சேர்ந்தவர் செல்வமணி. அவரது மகன் குமார்(39). ஓட்டலில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மகேஸ்வரி (37) என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்த நிலையில் குமார் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினமும் அவர் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் போதையில் மனைவியிடம் தகராறு செய்து தாக்கினார். தொடர்ந்து மனைவி மற்றும் பிள்ளைகளை வீட்டுக்கு வெளியே நிற்க வைத்துவிட்டு கதவை பூட்டி கொண்டார். இதையடுத்து அவர் வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற அருமனை போலீசார் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஓட்டல் தொழிலாளி தூக்குப்போட்டு சாவு appeared first on Dinakaran.

Read Entire Article