
விழுப்புரம்,
கன்னியாகுமரியில் இருந்து டெல்லிக்கு நேற்று முன்தினம் இரவு திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயிலில் சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த 42 வயதுடைய பெண் ஒருவர், கோவில்பட்டியில் இருந்து தாம்பரத்திற்கு எஸ்.2 பெட்டியில் பயணம் செய்தார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் அந்த ரெயில், உளுந்தூர்பேட்டையை கடந்து விழுப்புரம் நோக்கி வந்துகொண்டிருந்தபோது சிவகங்கை மாவட்டம் கீழ்தாலூர் பகுதியை சேர்ந்த மணி மகன் கண்ணன் (வயது 33) என்பவர் பெண்ணிடம் சில்மிஷம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.