
இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
என் தந்தையின் பணத்தை தவறான வழிகளுக்குப் பயன்படுத்திக்கொண்டே, எங்கள் குடும்பத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறார்.
அவருக்கிருக்கும் பதவி, பொருளாதார பேராசையைத் தீர்த்துக்கொள்ள, பிரசாந்த் கிஷோருடன் கூட்டணி அமைத்துக்கொண்டு பல கட்சிகளில் இணைந்து வருகிறார். அவர் செய்யும் கிறுக்குத்தனங்களுக்கும், எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இது தொடரும் பட்சத்தில், வழக்கு தொடரப்படும்.
பிஜேபி மாநிலத் தலைவர் அண்ணாமலை குறித்த ஆதவ் அர்ஜுனாவின் விமர்சனத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.