பரமக்குடி, டிச.4: ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை ஒன்றிய அரசு கொண்டு வருவதை கண்டித்து, பரமக்குடியில் போராட்டம் நடத்திய தாய் தமிழர் கட்சியினர் 91 பேர் கைது செய்யப்பட்டனர். பரமக்குடியில் தாய் தமிழர் கட்சியினர் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை ஒன்றிய அரசு கொண்டு வருவதை கண்டித்து, ரயில் நிலையம் முற்றுகை போராட்டம் நடத்தினர். கட்சியின் தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார்.
மாநில பொதுச்செயலாளர் செல்வம், மாநில அமைப்பு செயலாளர் சேது முனியசாமி, தலைமை நிலைய செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ச் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு ரயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு ரயில் மறியலில் ஈடுபட சென்றனர். அப்போது,ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை நிராகரிக்க கோரி ஒன்றிய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி 91 பேரை கைது செய்தனர்.
The post ஒரே நாடு ஒரே தேர்தலை கண்டித்து ரயில் நிலையம் முற்றுகை போராட்டம்: பரமக்குடியில் 91 பேர் கைது appeared first on Dinakaran.