சென்னை: கலவரத்தை தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து சீமானை விடுவிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 2019 விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ராஜீவ் காந்தி குறித்து அவதூறாக பேசியதாக சீமான் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில்; தொடர்ந்து நீதிமன்ற படி ஏறினால்தான் சீமானுக்கு நிதானம் வரும். அரசியல் கட்சித் தலைவர்கள் குறித்து நிதானத்துடன் பேச வேண்டும். அடுத்தவரை எரிச்சலூட்டும் வகையில் பேசுவதுதான் சீமானுக்கு வழக்கமாக உள்ளது என நீதிபதி வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
The post அரசியல் கட்சித் தலைவர்கள் குறித்து நிதானத்துடன் பேச வேண்டும்: சீமானுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை appeared first on Dinakaran.