திண்டுக்கல், ஏப். 9: திண்டுக்கல் மாவட்ட மாநகர காங்கிஸ் சார்பில் வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடந்தது. திண்டுக்கல் மாவட்ட மாநகர காங்கிரஸ் தலைவர் துரை மணிகண்டன் தலைமை வகித்தார். இதில், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் முகமது அலியார், பகுதி செயலாளர் அப்பாஸ் மந்திரி, காஜாமைதீன், ஜோதி ராமலிங்கம், வேங்கை ராஜா, மண்டல தலைவர் கார்த்திக், மாமன்ற உறுப்பினர் பாரதி, மகிளா காங்கிரஸ் தலைவி ரோஜா பேகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரசார் போராட்டம் appeared first on Dinakaran.