ஒன்றிய அரசு மூத்த குடிமக்களுக்கு வழங்கும் மருத்துவ காப்பீட்டு தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும்: பிரதமர் மோடிக்கு திருமாவளவன் கடிதம்

4 months ago 12

சென்னை: ஒன்றிய அரசு மூத்த குடிமக்களுக்கு வழங்கும் மருத்துவ காப்பீட்டு தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு விசிக தலைவர் திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக அவர் அனுப்பிய கடிதம்: ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டம் மூலம் 70 வயது மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பாராட்டக்கூடியதாக இருந்தாலும் வயது வரம்பை 60 வயதாக குறைக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி 5 லட்சம் வரை மட்டுமே இலவசமாக சிகிச்சை எடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு அதிக மருத்துவ செலவு ஏற்படும் என்பதால் அதனை ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும். மேலும் மூத்த குடிமக்கள், பெண்கள் அதிக அளவில் கிராமப்புறத்தில் வசித்து வருவதால் அதுகுறித்தும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அதேபோல மாற்றுத்திறனாளிகளுக்கும் சிறப்பு ஏற்பாடு செய்ய வேண்டும். இதனை தவிர, ஆயுஷ்மான் வயா வந்தனா அட்டை பயன்படுத்துவோர் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.

The post ஒன்றிய அரசு மூத்த குடிமக்களுக்கு வழங்கும் மருத்துவ காப்பீட்டு தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும்: பிரதமர் மோடிக்கு திருமாவளவன் கடிதம் appeared first on Dinakaran.

Read Entire Article