
சென்னை,
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறும் சென்னை - பஞ்சாப் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டியைக் காண வரும் பார்வையாளர்கள், போட்டிக்கான டிக்கெட்டுகளை வைத்து சென்னை மெட்ரோ ரெயிலில் இலவசமாகப் பயணிக்கலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது .
அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திலிருந்து கடைசி ரெயிலில் நள்ளிரவு 1 மணிக்கு அல்லது போட்டி முடிந்த 90வது நிமிடத்தில் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .