ஏரல், ஜன. 29: ஏரலில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, பேரூராட்சி தலைவர் சர்மிளாதேவி மணிவண்ணன் தலைமையில் நடந்தது. ஏரலில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம், பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்டு கலந்துரையாடும் நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் சர்மிளாதேவி மணிவண்ணன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். ஏரல் அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் மணிவண்ணன், கவுன்சிலர் ஜவ்பர்சாதிக் அலி, பேரூராட்சி பணியாளர்கள் அடைக்கலம், அழகு, ஜாண்சன், பாபு, தூய தெரசாள் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சார்லஸ் கிறிஸ்டோபர் மற்றும் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள், தூய்மை பணியாளர்கள், டெங்கு மஸ்தூர் பணியாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post ஏரலில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.