ஏ.டி.எம்.களில் 100, 200 ரூபாய் நோட்டுகள் கட்டாயம் - வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்

2 weeks ago 6

மும்பை,

செப்டம்பர் மாதத்திற்குள் 75 சதவீத ஏ.டி.எம்.களில் ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகள் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்யவும், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 90 சதவீத ஏ.டி.எம்.களில் விநியோகிக்கப்பட வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அடிக்கடி பயன்படுத்தும் குறைந்த மதிப்பு கொண்ட பணத்தாள்கள் மக்களுக்கு அதிகமாக கிடைக்கும் வகையில் ஏ.டி.எம்.களில் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் இருப்பதை வழக்கமான அடிப்படையில் உறுதி செய்ய வேண்டும். இதை படிப்படியாக அமல்படுத்த வேண்டும்' என கூறப்பட்டு உள்ளது.

அந்தவகையில் 75 சதவீத ஏ.டி.எம்.களில் வருகிற செப்டம்பர் 30-ந்தேதிக்குள் குறைந்தபட்சம் ஒரு அறையிலாவது மேற்படி நோட்டுகள் இருப்பதை உறுதி செய்யுமாறு கூறியுள்ள ரிசர்வ் வங்கி, அனைத்து ஏ.டி.எம்.களிலும் அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள் இந்த முறையை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

Read Entire Article