மதுரை: மதுரை - அலங்காநல்லூர் கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் துள்ளி திமிறிய காளைகளை வீரர்கள் அடக்கி பரிசுகளை வென்றனர்.
பொங்கலை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லுாரில் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் பதிவு செய்யும் காளைகள் போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் உருவானது.