“எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லாததால் பாஜகவுக்கு தொடர் வெற்றி” - பெ.சண்முகம்

3 hours ago 1

காரைக்குடி: ‘டெல்லி தேர்தல் முடிவுகள் வருத்தம் அளிக்கிறது’ என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ராமசாமி தமிழ் கல்லூரியில் முன்னாள் மாணவரான மார்க்ஸிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்துக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பெ.சண்முகம் கூறியது: “டெல்லி தேர்தல் முடிவு வருத்தம் அளிக்கிறது. மக்களவைத் தேர்தலுக்கு பின்பு இண்டியா கூட்டணி இருக்கிறதா? இல்லையா என்ற சந்தேகம் எழும் வகையில், அதன் தலைவர்கள் செயல்பட்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை காரணமாகவே பாஜக தொடர்ந்து வெற்றி பெறுகிறது. இதை எதிர்க்கட்சி தலைவர்கள் உணர வேண்டும்.

Read Entire Article