சென்னை: ‘‘7-வது ஊதியக் குழுவில் களையப்படாமல் உள்ள ஊழியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை 8-வது ஊதியக் குழுவில் தீர்க்க வேண்டும்’’ என அகில இந்திய பாதுகாப்பு ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து அகில இந்திய பாதுகாப்பு ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.ஸ்ரீ குமார், மத்திய பாதுகாப்புத் துறை செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தின் விவரம்: ‘மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதிய தாரர்களுக்கான 8-வது மத்திய ஊதியக் குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு புதிய ஊதிய விகிதத்தை நிர்ணயிக்கும். எனவே, 8-வது ஊதியக் குழுவுக்குப் பாதுகாப்புத் துறை சார்பில் அளிக்கும் பரிந்துரையில் பின்வரும் கோரிக்கைகளைச் சேர்க்க வேண்டும்.