சென்னை: சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அரசு சார்பில் வாதாட 39 புதிய வழக்கறிஞர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: நீதிமன்றங்களில் அரசு தரப்பில் வாதாட கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள், சிறப்பு அரசு வழக்கறிஞர்கள், உரிமையியல் (சிவில்) மற்றும் குற்றவியல் வழக்குகளுக்கு அரசு வழக்கறிஞர்களை நியமிக்க கடந்தாண்டு டிசம்பர் 20ம் தேதி ஆலோசனை நடத்தப்பட்டது.
அதன்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில், இ.வேத பகத் சிங், ஓ.என்.புருசோத்தமன், எஸ்.செந்தில் முருகன், யு.பரணிதரன், சி.ஹர்ஷாராஜ் ஆகியோர் சிறப்பு அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்படுகிறார்கள். கே.அஸ்வினி தேவி, ஆர்.சித்தார்த், டி.கே.சரவணன், எஸ்.இந்துபாலா ஆகியோர் கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுகிறார்கள். குற்றவியல் வழக்குகளில் அரசு தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர்களாக சி.பாஸ்கரன், எஸ்.உதயகுமார், ஆர்.வெங்கடேச பெருமாள் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.
சிவில் வழக்குகளில் ஆஜராக வி.உமாகாந்த், பி.கருணாநிதி, வி.வெங்கட சேஷையா, சி.கவுதமராஜ், ஏ.பாக்கிய லட்சுமி, ஆர்.சசிகுமார், இ.பி.சென்னியாங்கள், பி.ஐஸ்வர்யா, வி.வீரமணி ஜி.பிரசன்னா ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள். பி.செல்வி வரிகள் தொடர்பான வழக்குகளில் ஆஜராக நியமிக்கப்படுகிறார். சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அரசு தரப்பில் ஆஜராக சிறப்பு அரசு பிளீடர்களாக எப்.தீபக், எம்.லிங்கதுவை, சி.வெங்கடேஷ் குமார் ஆகியோரும், கூடுதல் அரசு பிளீடர்களாக எஸ்.மாதவன், கே.மாலதி, பி.ராமநாதன் ஆகியோரும் நியமிக்கப்படுகிறார்கள்.
குற்றவியல் வழக்குகளில் ஆஜராகும் அரசு வழக்கறிஞர்களாக கே.ஞானசேகரன், எஸ்.எஸ்.மனோஜ், எம்.கருணாநிதி, எஸ்.பிரகாஷ் ஆகியோரும், சிவில் வழக்குகளில் ஆஜராகும் அரசு வழக்கறிஞர்களாக எஸ்.ஜெய பிரியா, எஸ்.வினோத், எம்.கங்காதரன், பி.பி.அகமத் யாஸ்மின் பர்வீண், ஏ.ஒலிராஜா, கே.ஆர்.பதுரஸ் ஜாமன் ஆகியோரும் நியமிக்கப்படுகிறார்கள். உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் மொத்தம் 39 புதிய அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
The post உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராக 39 அரசு வழக்கறிஞர்கள் நியமனம்: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.