உதவி வழக்கு நடத்துநர் தேர்வுக்கு நுழைவு சீட்டு

1 month ago 6

நாகர்கோவில், டிச.6: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கையின்படி அரசு உதவி வழக்கு நடத்துனர் நிலை-2 பதவிக்கான கணினி வழி தேர்வு வரும் டிசம்பர் 14ம் தேதி பிற்பகல் நடைபெற உள்ளது. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் தேர்வாணயத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.inல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களின் ஒருமுறை பதிவேற்றம் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post உதவி வழக்கு நடத்துநர் தேர்வுக்கு நுழைவு சீட்டு appeared first on Dinakaran.

Read Entire Article