8 குடும்பங்களை ஊரை விட்டு விலக்கி வைத்த விவகாரம்: தென்காசி ஆட்சியருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

3 hours ago 2

தென்காசி: தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை பகுதியில் ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் 8 குடும்பங்களை ஊரை விட்டு விலக்கி வைத்த விவகாரத்தை தேசிய மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இது தொடர்பாக 2 வார காலத்துக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை பகுதியில் 2,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் ஊர் கட்டுப்பாடுகள் காரணமாக அப்பகுதியைச் சேர்ந்த குடும்பங்களை ஊரை விட்டு விலக்கி வைக்கப்பதாக கடந்த சில ஆண்டுகளாகவே குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் சாம்பவர்வடகரை கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவரை இடப் பிரச்சினை காரணமாக ஊரை விட்டு விலக்கி வைத்து, ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Read Entire Article