
நீலகிரி மாவட்டம் உதகை பகுதியை சேர்ந்தவர்கள் தேயிலை தோட்டம் ஒன்றில் வேலை செய்து வந்தனர். அப்போது அந்த தேயிலை தோட்டத்தில் உடல் உறுப்புகள் சிதறிக்கிடந்த நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு பெண்ணின் உடல் உறுப்பானது சிதறிக்கிடந்தது. பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் இறந்த பெண் குறித்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் இறந்த பெண் காணாமல் போனதாக கூறப்படும் அஞ்சலை என அடையாளம் காணப்பட்டுள்ளது. அன்சலையை தாக்கி உடலை இழுத்துச்சென்றது சிறுத்தையா? புலியா? என்பதை கண்டறியும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.