உடுமலை, பிப்.12: உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பு கேமரா அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். கோவை-திண்டுக்கல் வழித்தடத்தில், உடுமலை ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. தற்போது, கோவை – மதுரை, பாலக்காடு – சென்னை, பாலக்காடு – திருச்செந்தூர், திருவனந்தபுரம் – மதுரை, மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி இடையே ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த ரயில்களிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கில் பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் டிக்கெட் முன்பதிவு செய்யவும், டிக்கெட் எடுக்கவும் ஏராளமானோர் இங்கு வருகின்றனர். பயணியரின் பாதுகாப்பு கருதியும், சமூக விரோத செயல்களை தடுக்கவும், ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பு கேமரா அமைக்க தெற்கு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.