சென்னை: உலகத் தண்ணீர் நாள் மார்ச் 22 ஆம் நாளான நாளை கடைபிடிக்கப்படவுள்ள நிலையில், உச்சநீதிமன்ற ஆணைப்படி தமிழக சதுப்பு நிலங்களை அறிவிக்கை செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “உலகத் தண்ணீர் நாள் மார்ச் 22 ஆம் நாளான நாளை கடைபிடிக்கப்படவுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள நீர் ஆதாரங்களான சதுப்பு நிலங்களை அறிவிக்கை செய்து பாதுகாக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. நீர்வளங்களைக் காப்பதில் தமிழக அரசு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.