ஈரோடு: ஈரோட்டில் 17 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். வழக்கில் தற்போது தலைமறைவாக இருந்த ரஞ்சித் என்பவரை ஈரோடு மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர். வழக்கில் ஏற்கெனவே சந்தோஷ், மணிகண்டன், குகன், கிருஷ்ணன் ஆகியோர் போக்சோவில் கைது செய்யப்பட்டனர். மே 2ம் தேதி 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததுடன் அடித்து துன்புறுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது.
The post ஈரோட்டில் 17 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கு: மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.