இளம்பெண் கடத்தல்; வாலிபர் மீது புகார்

2 months ago 10

கிருஷ்ணகிரி, டிச.5: கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் அருகேயுள்ள மருதேப்பள்ளியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி மகாலட்சுமி(23), கிருஷ்ணகிரி அருகேயுள்ள பூசாரிப்பட்டியில் அட்டை தயாரிக்கும் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். கடந்த 25ம் தேதி, வேலைக்கு சென்ற மகாலட்சுமி மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து செந்தில்குமார் கந்திகுப்பம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதில், விஜயகுமார் என்பவரிடம், அடிக்கடி தனது மனைவி செல்போனில் பேசி வந்தார். இதனால் ஆசைவார்த்தை கூறி, அவர் தனது மனைவியை கடத்திச் சென்றிருக்கலாம் என தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post இளம்பெண் கடத்தல்; வாலிபர் மீது புகார் appeared first on Dinakaran.

Read Entire Article