சென்னை: ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 11 மீனவர்கள், கடந்த ஜனவரி மாதம் 2 விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு இலங்கை கொண்டு சென்று சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை விடுவிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவசர கடிதம் எழுதினார்.
இதையடுத்து இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி இலங்கை நீதிமன்றம் வாயிலாக கடந்த 14ம் தேதி மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு எமர்ஜென்சி சர்டிபிகேட்கள் வழங்கப்பட்டு விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பப்பட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மீனர்கள் சென்னைக்கு வந்தனர்.
The post இலங்கை சிறையில் இருந்து விடுவிப்பு ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் சென்னை வந்தனர் appeared first on Dinakaran.