இலங்கை, ஒன்றிய அரசை கண்டித்து மீனவர்கள் ஸ்டிரைக்

1 week ago 3

மண்டபம்: இலங்கை, ஒன்றிய அரசை கண்டித்து, மண்டபம் மீனவர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கினர். இலங்கை கடற்படையினர் கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து இந்திய எல்லைக்குள் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து வருகின்றனர். வலைகளை சேதப்படுத்துவது, தாக்குதல் நடத்துவது என மீன் பிடிக்க விடாமல் தொடர்ந்து கடலிலேயே படகுகளை விரட்டி அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மீனவர்களுக்கு பெரும் பொருளாதார நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இலங்கை கடற்படையின் அட்டூழியத்தால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்படைந்துள்ளது.

எனவே, இலங்கை கடற்படையின் அத்துமீறல்களை கண்டித்தும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், மண்டபம் மீனவர்கள் நேற்று முதல் 2 நாட்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கினர். இந்த போராட்டத்தால் 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை மீனவர்கள் கடலில் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி உள்ளனர். இதனால் 3 ஆயிரம் மீனவர்களின் வாழ்வாதாரமும், ரூ.6 கோடி வர்த்தகமும் பாதிப்பு ஏற்படும்.

The post இலங்கை, ஒன்றிய அரசை கண்டித்து மீனவர்கள் ஸ்டிரைக் appeared first on Dinakaran.

Read Entire Article