இருளில் மூழ்கும் மதுரை பெரியார் பேருந்து நிலையம்: இரவில் பயணிகள் அச்சம்

3 months ago 16

மதுரை: பெரியார் பேருந்து நிலையத்தில் போதுமான மின்விளக்குகள் இல்லாததால் இரவில் பேருந்து நிலையம் வளாகம் இருளில் மூழ்கி வருகிறது. அதனால், பயணிகள் இரவில் பேருந்துகளுக்காக காத்திருக்க அச்சமடைந்துள்ளனர்.

மதுரை மாநகரின் மையப் பகுதியான பெரியார் நிலையத்தில், தற்போதைய பெரியார் பேருந்து நிலையம் கடந்த 1921-ம் ஆண்டு முதல் செயல்பட தொடங்கியது. அப்போது அந்த பேருந்து நிலையம் மத்திய பேருந்து நிலையம் என்று அழைக்கப்பட்டது. 1971 முதல் பெரியார் பேருந்து நிலையமாக மாற்றப்பட்டது. 2018-ம் ஆண்டில் மத்திய அரசின் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் நவீன வசதிகளுடன் பெரியார் பேருந்து நிலையத்தை புதுப்பித்து கட்டுவதற்கு மாநகராட்சி திட்டமிட்டது.

Read Entire Article