இருமொழிக் கொள்கை குறித்த விமர்சனம்: ஆளுநருக்கு அமைச்சர் ரகுபதி, முத்தரசன் கண்டனம்

2 hours ago 2

சென்னை: ‘‘மாநில அரசின் கடுமையான இருமொழிக் கொள்கை காரணமாக அண்டை மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுடன் ஒப்பிடும்போது இந்த பிராந்திய இளைஞர்கள் வாய்ப்புகளை இழந்தவர்களாக உணர்கிறார்கள் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு, சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மாநில அரசின் இருமொழிக் கல்வி குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி தனது சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: தென் தமிழகத்தைச் சேர்ந்த கல்வி, வணிகம், சுகாதாரம், விருந்தோம்பல், இளைஞர் ஸ்டார்ட்-அப்கள் மற்றும் பெண் தொழில்முனைவோர், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெருவாரியான உள்ளூர் தலைவர்கள் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களின் மாணவர்களுடன் கலந்துரையாடினேன்.

Read Entire Article