இமானுவேல் சேகரனுக்கு மக்கள் பணத்தில் மணிமண்டபமா? - எதிர்ப்பும் ஆதரவும்

2 months ago 19

ராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையும் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தின நிகழ்ச்சியும் அரசியல் கட்சிகளால் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளாக மாற்றப்பட்டுவிட்டன. ஏற்கெனவே தேவர் குருபூஜையானது அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இமானுவேல் சேகரன் பிறந்த நாளையும் அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்தாண்டு செப்.11-ல் இமானுவேல் சேகரன் நினைவு நாளில், ரூ.3 கோடியில் பரமக்குடியில் அவருக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின். இதற்காக பரமக்குடி சந்தைப்பேட்டை பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டு மணிமண்டபம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.

Read Entire Article