இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 12590 மாணவர்கள் எழுதுகின்றனர்

3 days ago 2

 

கரூர், மார்ச் 28: கரூர் மாவட்டத்தில் இன்று நடைபெறவுள்ள 10ம் வகுப்பு பொதுத் தேர்வினை 12590 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். கருர் மாவட்டத்தில் நேற்றுடன் பிளஸ் 1 தேர்வுகள் முடிவடைந்துள்ளன. இதனைத்தொடர்ந்து மார்ச் 28ம்தேதி முதல் ஏப்ரல் 15ம்தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறவுள்ளன.

கருர் மாவட்டத்தில் இந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை 188 பள்ளிகளில் இருந்து 59 மையங்களில் 5706 மாணவர்கள், 5781 மாணவிகள் என 11487 மாணவர்களும், 7 மையங்களில் தனித்தேர்வர்களாக 1103 மாணவர்களும் என மொத்தம் இந்த தேர்வினை 12590 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு எழுதுகின்றனர். தேர்வு பாதுகாப்பு பணிக்காக 110 பறக்கும் படையினர்களும், அறைக் கண்காணிப்பாளர்களாக 810 பேர்களும் நியமிக்கப்பட்டு பணியாற்ற உள்ளனர்.

The post இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 12590 மாணவர்கள் எழுதுகின்றனர் appeared first on Dinakaran.

Read Entire Article