
லண்டன்,
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் தொடரில் லீட்சில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பர்மிங்காமல் நடந்த 2- வது டெஸ்டில் இந்தியா 336 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.
இதனால் 1-1 என்ற சமநிலை ஏற்பட்டுள்ளது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3 வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை (10-ந்தேதி) தொடங்குகிறது. இந்திய அணியின் அதிரடி இந்த டெஸ்டிலும் நீடிக்குமா? என்று ஆவலு டன் எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தை மீண்டும் வீழ்த்தி முன்னிலை பெறும் ஆர்வத்துடன் இந்தியா உள்ளது. கடைசியாக 2021-ம் ஆண்டு லார்ட்சில் வீராட் கோலி தலைமையிலான அணி 151 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இதனால் இந்தியா நம்பிக்கையுடன் விளையாடும்.
நாளைய டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. சோனி ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விவரம் வருமாறு:
சாக் கிராவ்லே, பென் டக்கெட், ஓல்லி போப், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ட்ஸ், ஜேம் ஸ்மித், கிறிஸ் வோஸ், பிரைடன் கார்சே, ஜோப்ரா ஆர்ச்சர், ஷோயிப் பாஷிர்
ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 52 மாத இடைவெளிக்கு பிறகு ஜோப்ரா ஆர்ச்சர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. காயம் காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து அவர் விலகி இருந்தார்.