
சென்னை,
சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மெரினா நீச்சல் குளத்தில் தண்ணீர் சுத்திகரிப்பு மையம் தங்குதடையின்றி இயக்க ஏதுவாக குழாய் அமைத்தல், ஊறு குழிகள் பொருத்துதல், சோதனை உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, வெள்ளிக்கிழமை முதல் 31-ந்தேதி வரையில் மெரினா நீச்சல் குளம் 20 நாட்கள் இயங்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.