டெல்லி: இந்தியாவில் ஆயத்த ஆடைகள் தயாரிப்பில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. குறிப்பாக திருப்பூர் நகரம் ஆயத்த ஆடை உற்பத்தியில் இந்தியாவின் முதன்மை நகரமாக விளங்குகிறது. மேலும், ஜவுளித் தொழில் ஏற்றுமதியிலும் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. இந்திய ஆயத்த ஆடைத் துறையில் தமிழ்நாட்டின் பங்களிப்பு.
* நாட்டில் ஆயத்த ஆடை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள மொத்த தொழிலாளர்களில் 19.1% பேர் தமிழ்நாட்டில் உள்ளனர்.
* ஆயத்த ஆடை தயாரிப்பில் உள்ள தொழிலாளர்களில் அதிக ஊதியம் பெறுவதும் தமிழ்நாட்டில் உள்ள தொழிலாளர்களே.
*மாநிலத்தில் உள்ள தொழிலாளர்களில் 49.8% பேர் திருப்பூரில் பணியாற்றுகின்றனர்.
*ஆடை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள 19 லட்சம் தொழிலாளர்களில் 3.61 லட்சம் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பணிபுரிகின்றனர்.
*திருப்பூரில் மட்டுமே 1.8லட்சம் தொழிலாளர்கள் ஆயத்த ஆடை தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
*தமிழ்நாட்டில் ஆயத்த ஆடை தயாரிப்பு தொழிலாளர்களில் 50% பேர் ஈரோடு, திருவள்ளூர், கோவையில் உள்ளனர்.
The post இந்தியாவில் ஆயத்த ஆடைகள் தயாரிப்பில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்து சாதனை..!! appeared first on Dinakaran.