இந்தியாவில் உள்ள மாநிலங்களில் 90 சதவீதம் ஆண்களே முதல்வராக உள்ளதாகவும், பெண்களுக்கும் சம வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் சென்னையில் நடந்த மகளிர் தின நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
இந்திய உணவுக் கழகம் சார்பில் சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சி சென்னை சேத்துப்பட்டில் உள்ள மண்டல அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக எம்.பி.யும், உணவு மற்றும் பொது விநியோகம், நுகர்வோர் விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவருமான கனிமொழி கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்திய உணவுக் கழகத்தின் தென்மண்டல நிர்வாக இயக்குநர் ஜெசிந்தா லாசரஸ் முன்னிலை வகித்தார்.