சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தென்னக மொழிகளை புறக்கணித்து தென்னகத்திற்கு எதிரான ஒரு ஆட்சியை பிரதமர் மோடி நடத்தி வருகிறார். அதற்காக தொகுதி மறுசீரமைப்பிற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறார். இந்த முயற்சியை எதிர்த்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 59 கட்சிகளை அழைத்து, கருத்துகளை கேட்டு ஏகமனதாக தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார்.
இதில் பங்கேற்று கருத்துகளை கூறுவதற்கு துணிவற்ற கோழைகளாக பாஜ உள்ளிட்ட 5 கட்சிகள் இதை புறக்கணித்திருக்கின்றன. இதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் கோபத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். தமிழக பாஜ இந்தி மொழிக்கு ஆதரவாக நடத்தும் கையெழுத்து இயக்கத்தின் மூலம் பெறப்படும் ஒவ்வொரு கையெழுத்தும் பாஜவின் எதிர்காலத்தின் மீது விழப்போகிற சம்மட்டி அடியாகவே அமையப் போகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post இந்தி மொழிக்காக நடத்தும் கையெழுத்து இயக்கம் பாஜவின் எதிர்காலத்துக்கு விழப்போகும் சம்மட்டி அடி: செல்வப்பெருந்தகை எச்சரிக்கை appeared first on Dinakaran.