பல்லாவரம்/காஞ்சிபுரம்: தமிழ்நாடு இந்தியாவில் இரண்டாவது பொருளாதார மாநிலமாக வளர்ந்துள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காஞ்சி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் செலுத்தும் பொதுக்கூட்டம் பல்லாவரம் கண்டோன்மென்ட் பகுதியில் நேற்று நடைபெற்றது. இது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது: 5,500 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் தொன்மையான மொழி என நாம் ஆய்வு மூலம் நிரூபித்திருக்கிறோம்.
தமிழ்நாடு அனைத்து வழிகளிலும் உயர்ந்துள்ளது. தமிழ்நாடு இந்தியாவில் இரண்டாவது பொருளாதார மாநிலமாக வளர்ந்துள்ளது. தேசிய உள்நாட்டு உற்பத்தியில் 5.4 சதவீதமாக இருந்து கடந்த 4 ஆண்டுகளில் 9.2 சதவீதம் உயர்ந்துள்ளது. உள்நாட்டு பொருளாதரா கொள்கையில் தமிழகம் வளர்ச்சியை எட்டியுள்ளது. மருத்துவம், கல்வி, சமூக நலன் இவற்றை மேம்படுத்த இந்தியாவிலேயே முன்மாதிரி மாநிலமாக தமிழகம் உள்ளது.