
அகமதாபாத்,
இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி இங்கிலாந்தை ஒயிட்வாஷ் ஆக்கியது. இந்த தொடர் நேற்று நிறைவடைந்தது.
முன்னதாக ஒவ்வொரு தொடரிலும் பீல்டிங் துறையில் சிறந்து விளங்கும் இந்திய வீரருக்கு பி.சி.சி.ஐ. சார்பில் 'இம்பேக்ட் பீல்டர்' விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
அதன்படி இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் சிறந்த பீல்டராக ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு இந்த விருதை இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் வழங்கி கவுரவித்தார்.
