சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்ற ஒன்றிய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசு வழக்கில் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்த நிலையில் ஆளுநர் மாற்றம் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு ஆளுநராக கடந்த 2021ஆம் ஆண்டு முதல் ஆர்.என்.ரவி பணியாற்றி வருகிறார். ஆர்.என்.ரவி மாற்றப்பட்டால் புதிய ஆளுநராக யாரை நியமிக்கலாம் என்று பிரதமர் அலுவலகம் மற்றும் உள்துறை அமைச்சகம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தவாரம் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
The post ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்ற ஒன்றிய அரசு முடிவு appeared first on Dinakaran.