ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு குரூப் 2, 2ஏ தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் கலெக்டர் தகவல் வேலூர் மாவட்டத்தில்

4 months ago 14

வேலூர், ஜன.3: வேலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு குரூப் 2, 2ஏ தேர்வுக்கு பயிற்சி வகுப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் சுப்புலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) முன்னெடுப்பாக முன்னனி பயிற்சி நிறுவனம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணக்கர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் டிஎன்பிஎஸ்சி குரூப்2-, 2ஏ தேர்வுகளுக்கு பயிற்சியினை வழங்கவுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்2-, 2ஏ முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்விற்கு தேர்ச்சி பெற விரும்பும் மாணாக்கர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியினை பெற பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் 21 முதல் 32 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களாக இருக்க வேண்டும், விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவீன தொகை தாட்கோவால் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.com என்ற முகவரியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு குரூப் 2, 2ஏ தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் கலெக்டர் தகவல் வேலூர் மாவட்டத்தில் appeared first on Dinakaran.

Read Entire Article